Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிக்கல்வித்துறையின் புதிய நடவடிக்கை

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நடவடிக்கை

-

அரசு பள்ளி மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் மகளிர் தையல் குழுக்கள் மூலமாக சீருடை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நடவடிக்கை

அதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுக்க உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில் மாறுபாடு இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கடந்த காலங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் 50 பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக அளவு எடுத்து மாவட்டத்தில் உள்ள மகளிர் தையல் குழுக்கள் மூலமாக சீருடை தைத்துக் கொடுக்கலாமா என பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.

சோதனை அடிப்படையில் 50 பள்ளிகளுக்கு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலமாக, அதன் நிதியிலிருந்து செயல்படுத்தலாமா எனவும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

MUST READ