spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து- இருவர் பலி

உதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து- இருவர் பலி

-

- Advertisement -

உதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து- இருவர் பலி

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 28 பேர் வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுபாட்டினை இழந்து எதிரே வந்த இருச்சக்கர வாகனத்தில் மோதியதில் கணவர், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 28 பேர் தனியார் பேருந்து மூலம் சுற்றுலா வந்துள்ளனர். உதகை, குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு பின்னர், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சென்றுள்ளனர். பேருந்து பர்லியாறு பகுதியில் உள்ள கொண்டை ஊசி வலைவில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுபாட்டினை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

we-r-hiring

Accident

பேருந்து கட்டுபாட்டினை இழந்து எதிரே வந்த இருச்சக்கர வாகனத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் எதிரே இருச்சக்கர வாகனத்தில் வந்த கணவர் மற்றும் மனைவியான உதகையை சேர்ந்த சையது அலி, ஜீனத் அஸ்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக குன்னூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ