Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு

ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு

-

ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு

திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த இரண்டரை ஆண்டுகளில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு வெறும் 3.00 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்ட நிலையில் பால் பொருட்களின் விற்பனை விலை மட்டும் தொடர்ந்து உயர்த்தப்பட்டுவருகிறது.

tn

குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி ஆவின் பாதம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை ஒரு கிலோவுக்கு 100.00 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் அதன் விற்பனை விலை மீண்டும் ஒரு கிலோவுக்கு 100.00ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பன்னீர் 1 கி.கி – ரூ.450 லிருந்து ரூ.550, பன்னீர் 1/2 கி.கி – ரூ.250 லிருந்து ரூ. 300, பன்னீர் 200 கி – ரூ.100 லிருந்து ரூ.120, பாதாம் மிக்ஸ் 200 கிராம் – ரூ.100 லிருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (25.07.2023) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் கடந்த 2022ல் மூன்று முறை பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியது குறிப்பிடதக்கது.

MUST READ