spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!

ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!

-

- Advertisement -

பொங்கல் பண்டிகையை ஒட்டி தனது இல்லத்திற்கு முன்பாக குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கை அசைத்து, பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினிக்காக காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

we-r-hiring

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அவரிடம் வாழ்த்து பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் காலை முதலே அவரது இல்லத்திற்கு முன்பாக குவிந்தனர். தனது இல்லத்தின் முன்பு  திரண்டு நின்ற ரசிகர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வெளியே வந்து கை அசைத்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவரை கண்டத்தும் ரசிகர்கள் தலைவா… தலைவா… என ஆரவாரம் செய்தனர். ரசிகர்கள் வருகை அதிகமாக இருந்ததால்  ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பு காவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

இதனிடையே, முதல்முறை வந்தபோது நடிகர் ரஜினிகாந்த்தை சரியாக பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கூறியதால், அதனை ஏற்று இரண்டாம் முறையாக தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். மீண்டும் ரசிகர்கள் உங்களை பார்க்க வேண்டும் தலைவா… என தொடர்ந்து கூச்சலிட்டனர். அதனை ஏற்று மூன்றாவது முறையாக வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது :- அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்,
குறிப்பாக இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல். விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்தால் தான் மற்றவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும். இயக்குனர் சிபி சக்கரவர்த்தியோடு நடிக்கும் திரைப்படம் ஏப்ரலில் தொடங்கும். அந்த திரைப்படம் அனைவருக்கும் Entertainment Commercial படமாக இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ