நடிகை கௌதமி இடம் பண மோசடி செய்த இருவருக்கு முன் ஜாமின் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மனுதாரர் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டதால் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
நடிகை கௌதமி ராமநாதபுரம் காவல்நிலையத்தில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி அழகப்பன் என்பவர் 3 கோடி வாங்கியிருந்தார். பின்னர் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள சுவாத்தான் கிராமத்தில் 57 லட்சத்திற்கு 64 ஏக்கர் நிலத்தினை வாங்கி கொடுத்தார். ஆனால் பிளசிங் பார்ம் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு செபி அமைப்பு தடை செய்துள்ளதை மறைத்து மோசடியாக என்னிடம் விற்பனை செய்துள்ளார், அழகப்பன். எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் மீது, ராமநாதபுரம் குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமின் வழங்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அழகப்பன், அவரது மனைவி ஆர்த்தி, ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவர்களுக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என நடிகை கவுதமி தரப்பில் தாக்கல் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று, இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. நடிகை கௌதமியும் நீதிமன்றம் வந்திருந்தார்.
நடிகை கௌதமி தரப்பில் அழகப்பன் மற்றும் தொடர்புடையவர்களுக்கு முன் ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், ” குற்றம்சாட்டப்பட்ட நபரின் உறவினர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, “வழக்கின் 6 குற்றவாளிகளில், ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர் ஆகிய 4 பேருக்கும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். பின்னர், கௌதமியிடமிருந்து வாங்கிய பணத்தை திரும்ப செலுத்துவதாக இருந்தால் முக்கிய குற்றவாளிகளான அழகப்பன் மற்றும் அவரது மனைவிக்கு முன் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்தார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அல. அழகப்பன் ,ஆர்த்தி ஆகியோரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் திட்டம் இட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் வழக்கில் முன் ஜாமின் வழங்க இயலாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருவருக்கு மட்டும் முன் ஜாமீன் கோரிய மனுவை மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் திரும்ப பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
முக்கியமாக குற்றம் சாட்டப்ப ட்டவர்கள், போலீஸ் , மற்றும் செபி உள்ளிட்டவைகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டடு.
ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து: வந்தனா ஷாவின் நம்பிக்கை வார்தை – புத்தாண்டுக்கான குட் நியூஸ் !