
தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.20) வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை இன்று (பிப்.20) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
மணிரத்னம் படத்திற்காக பல பட வாய்ப்புகளை இழந்த பிரபல நடிகை!
இதில் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உரத்திற்கான மானியத்தை அதிகரிக்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை ரத்துச் செய்ய வேண்டும், ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும் உள்ளிட்டவை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
‘சைரன்’ படத்திற்கு கிடைத்த வெற்றி….. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சமுத்திரகனி!
தி.மு.க. அரசின் வாக்குறுதிப்படி, கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2023- 2024 ஆம் நிதியாண்டில் வேளாண்துறைக்கு 38,904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.