அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும், உறுப்பினர்கள் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்வதாகவும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.