spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்எல்சியை கண்டித்து போராட்டம்- அன்புமணி கைது

என்எல்சியை கண்டித்து போராட்டம்- அன்புமணி கைது

-

- Advertisement -

என்எல்சியை கண்டித்து போராட்டம்- அன்புமணி கைது

நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து என்.எல்.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Image

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்தன. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

we-r-hiring

Image

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விவசாய நிலங்களை என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தின் போது, தடையை மீறி உள்ளே நுழைய முயன்றதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் காவல்துறை வாகனத்தின் முகப்பு கண்ணாடி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபடும் பாமகவினரை, காவல்துறையினர் தடியடி நடத்தி களைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். போராட்டத்தை கலைக்க, காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை கலைத்து வருகிறார்கள்.

MUST READ