spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதாயை பிரிந்த குட்டி யானை - யானை மந்தைகளுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி!

தாயை பிரிந்த குட்டி யானை – யானை மந்தைகளுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி!

-

- Advertisement -

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை வனத்துறையினர் யானை மந்தைகளுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

we-r-hiring

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தாயை பிரிந்த குட்டி யானை அங்கும் இங்கும் அலைந்து திரிந்து தாயை தேடி அலைந்துள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் குட்டி யானையை கண்டுபிடித்து அதற்கு உணவுக் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தாய் யானையை தேடி குட்டி யானையுடன் வனத்துக்குள் வனத்துறையினர் பயணம் மேற்கொண்டனர். இதில் குட்டி யானையானது தாய் யானையுடனோ அல்லது யானை மந்தைகளுடனோ (கூட்டங்களுடனோ) சேரவில்லை என்றால் அந்த குட்டி யானையை யானைகள் பாதுகாப்பில் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குட்டி யானையை நேற்று தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினருக்கு இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.

 

 

MUST READ