Homeசெய்திகள்தமிழ்நாடுஅடுத்தது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்தான்- அண்ணாமலை

அடுத்தது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்தான்- அண்ணாமலை

-

அடுத்தது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்தான்- அண்ணாமலை

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது திமுகவிற்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜெயங்கொண்டத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டம்

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அடுத்தது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்தான், 36 பணிமாறுதலுக்கு ரூ.12 கோடி வாங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பாஜகவோ அல்லது அதன் கூட்டணி கட்சியோ போட்டியிட்டு வெல்லும். தமிழ் மண்ணின் கலாச்சாரம் தெரிவதால்தான் தமிழ் மொழியை பிரதமர் மோடி தூக்கி நிறுத்துகிறார். சோழ சாம்ராஜ்யத்தினை அறிந்த பிரதமர் மோடி, செங்கோலை கொண்டுவரச் செய்து, புதிய நடாளுமன்றத்தில் சபாநாயகர் சிலை அருகே வைத்து அழகு பார்த்துள்ளார்.

"திட்டமிட்டப்படி ஜூலை 09- ஆம் தேதி தி.மு.க. ஊழல் பட்டியல்"- அண்ணாமலை தகவல்!
Photo: Annamalai

திமுகவின் அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்ற வார்த்தை உள்ளது. ஆனால், இஸ்லாமியம், கிறிஸ்துவம் என்ற வார்த்தை இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் காலில் விழுந்துகொண்டிருந்தோம். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது” என்றார்.

MUST READ