
இன்று (மே 21) காலை 11.00 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். அத்துடன், மனு ஒன்றையும் ஆளுநரிடம் வழங்கினர். இந்த சந்திப்பில், பா.ஜ.க.வின் சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சாதனை!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தமிழகத்தில் பாலாறு, தேனாறு போல கள்ளச்சாராய ஆறு ஓடிக்கொண்டிருப்பதை ஆளுநரிடம் கூறியுள்ளோம். அமைச்சர் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க, முதலமைச்சரிடம் வலியுறுத்தி ஆளுநரிடம் கோரினோம். பதவிப் பிரமாணத்திற்கு எதிராக செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளதால் அவரை நீக்க வேண்டும்.
ஏற்காட்டில் கோடை விழாவும், மலர் கண்காட்சியும் இன்று தொடங்குகிறது!
விஷச்சாராய உயிரிழப்புகள் உள்ளிட்டவைத் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.