ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா நடந்த மைதானத்தில் உள்ள உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட சுண்டலில் புழு இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் இணைந்து இலக்கிய திருவிழாவை நடத்தி வருகிறது. புத்தகத் திருவிழாவிற்கு சென்ற ஷாகீதா பானு என்ற வாசகர் அங்கிருந்த உணவகத்தில் சுண்டல் வாங்கியுள்ளார்.
சுண்டலில் புழு இருந்ததை அறியாமல் அதனை உட்கொண்ட நிலையில், அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் உணவகம் கண்டுக்கொள்ளாத நிலையில், புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார்.
புதுச்சேரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக குலோத்துங்கன் பதவியேற்பு!
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், புழு கிடந்த சுண்டலை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.