Homeசெய்திகள்தமிழ்நாடுஅட்டைப்பெட்டியில் குழந்தை உடல்- விசாரிக்க உத்தரவு!

அட்டைப்பெட்டியில் குழந்தை உடல்- விசாரிக்க உத்தரவு!

-

- Advertisement -

 

அட்டைப்பெட்டியில் குழந்தை உடல்- விசாரிக்க உத்தரவு!
File Photo

சென்னை ஓம்.எம்.ஆர் நாவலூரில் 8ஆவது மாடியில் தாயைத் தேடி வந்த மூன்று வயது குழந்தை ஆரவ் பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்த போது தவறி கீழே விழுந்துள்ளது கீழே விழுந்த குழந்தையை மீட்ட பெற்றோர், உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது!

பின்னர், உயிரிழந்த குழந்தையின் மேல் துணியைச் சுற்றாமல் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் ஒப்படைத்தது. இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையானது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் முத்துச்செல்வன், “விதிகளுக்கு முரணாக அட்டைப்பெட்டியில் வைத்து சிசுவின் உடல் கொடுக்கப்பட்டுள்ளது. பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த குழந்தையின் தந்தை மசூத் கூறுகையில், “குழந்தையின் உடலில் துணிக் கூட சுற்றாமல் பெட்டியில் வைத்து கொடுத்தனர். ஜமாத் மூலம் உடலை பெற்று துணி சுற்றி எடுத்துச் சென்றோம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

“டாஸ்மாக் பார் ஏலத்தை ஒத்திவைக்க வேண்டும்”- ராமதாஸ் வலியுறுத்தல்!

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், குழந்தையின் உடலை உடற்கூராய்வுக்கு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ