Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் நூற்றாண்டை கண்ட உழைப்பாளர் தினம்

தமிழ்நாட்டில் நூற்றாண்டை கண்ட உழைப்பாளர் தினம்

-

- Advertisement -

தமிழ்நாட்டில் நூற்றாண்டை கண்ட உழைப்பாளர் தினம்

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காக உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்றும் தினமாம் மே 1 உழைப்பாளர் தினம்.

உழைக்கும் வர்க்கத்தின் உயிர் நாதமாகவும், ஆணி வேராகவும் இருந்து வருவது 8 மணி நேரம் வேலை. உலகம் முழுவதிலும் உள்ள ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் அதனை கவனத்தில் கொள்ளாமல், உழைப்பாளர்களின் உழைப்புக்கான கால நிர்ணயத்தை 12 மணி நேரமாக உயர்த்த துடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் நூற்றாண்டை கண்ட உழைப்பாளர் தினம்

நூறாண்டுகளுக்கு முன்னர் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் என வகுத்து, அவர்களின் உழைப்பு சுரண்டலில் ஈடுப்பட்டு வந்தனர். அதனால் ஆட்சியாளர்கள் முதல் அதிகார வர்க்கங்கள் வரை அனைவரும் செல்வத்தில் மிதந்தனர். ஆனால் உழைப்பாளர்கள் மட்டும் பசி, பட்டினி மற்றும் உடல்நலக்குறைவால் வறுமையின் பிடியில் சிக்கி உயிர் நீத்தனர்.

இந்நிலையில் 18 ஆம் நூற்றாண்டில் உலகம் வேகமாக வளர தொடங்கியது. வளர்ச்சி தொடங்கிய அதே காலகட்டத்தில் உழைப்பாளர்கள் மீதான சுரண்டலும் தொடங்கியது.

உழைப்பு சுரண்டலில் சிக்கி தவித்து வந்த தொழிலாளர்கள் ஒன்றுக்கூடி முதன் முதலாக இங்கிலாந்தில் ‘சாசன இயக்கம்’ என்ற இயக்கத்தினை தொடங்கி, ஆறு முக்கிய கோரிக்கைகளையும் வலியுறுத்தியது.

தமிழ்நாட்டில் நூற்றாண்டை கண்ட உழைப்பாளர் தினம்

அதில் முக்கியமானது 10 மணி நேரம் வேலை குறித்தக் கோரிக்கையாகும்.

அதனைத் தொடர்ந்து, 1834 ஆம் ஆண்டு பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தங்களுக்கான 15 மணி நேர பணியை குறைக்க ‘ஜனநாயகம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தோடு போராட தொடங்கினார்கள். அதே காலக்கட்டத்தில் பல்வேறு நாடுகளில் பணி நேரத்தை குறைக்க தொடர் போராட்டங்கள் நடந்து வந்தது.

ஆனால், அனைத்து போராட்டங்களும் தோல்வியில் தான் முடிந்தது. இந்த சூழலில்தான் ஆஸ்திரேலியாவில் 1856 ஆம் ஆண்டு கட்டிடத் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து கடுமையாக போராடி அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

இந்த வெற்றியை உத்வேகமாக கொண்ட தொழிலாளர்கள், ரஷ்யா, அமெரிக்காவிலும் பணிநேர குறைப்பு போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த போராட்டங்களே பின்னாளில் ரஷ்ய புரட்சிக்கும் வித்திட்டது.

1830 முதல் அமெரிக்கா தொழிலாளர்கள் போரட்டங்களை நடத்தி வந்தாலும் 1870 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர்தான் அங்கும் அப்போராட்டம் வீரியமடைந்தது.

தமிழ்நாட்டில் நூற்றாண்டை கண்ட உழைப்பாளர் தினம்

இச்சூழலில் 1886 ஆம் ஆண்டி மே 1 தேதி அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 8 மணி நேர வேலை நேரம் கோரிக்கையை முன் வைத்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். பிற்காலத்தில் இப்போரட்டமே மே தினம் உருவாக ஆரம்ப விதையாக அமைந்தது என்று கூறலாம்.

மேலும் இப்போராட்டத்தில் அமெரிக்கா முழுவதும் சுமார் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி சிகாகோவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இக்கூட்டத்தினை ஒருங்கிணைத்த தலைவர்கள் 7 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
அவர்களின் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்காவில் 5 இலட்சம் தொழிலாளர்கள் பங்கேற்று பெரும் எழுச்சியை ஏற்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து 1889 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி பாரீசில் நடைபெற்ற ‘உலக தொழிலாளர்கள் பாராளுமன்றத்தில்’ காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த 400 பேர் பங்கேற்றனர்.
அதில் மே 1 ஆம் தேதியை உலக உழைப்பாளர் தினமாகவும், மே தினமாகவும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் 1923 ஆம் ஆண்டு, தோழர் சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் முதன் முதலாக உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாட்டில் நூற்றாண்டை கண்ட உழைப்பாளர் தினம்

18 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய உழைப்பாளர்களின் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 21 ஆம் நூற்றாண்டு வரை நீடித்துக் கொண்டேயிருக்கிறது.

இன்றும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தொடங்கி தனியார் கம்பெனி ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை போராடி வருகின்றனர். ஆனாலும் அதிகார வர்க்கம் தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சிக்கவே செய்கிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது.

மேலும் 8 மணி நேரம் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி தொழிலாளர்களை மீண்டும் போராடுவதற்கு வழிவகுத்துள்ளது. உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக இதுபோன்ற சட்டம் இயற்றுவதை ஆட்சியாளர்கள் நிறுத்த வேண்டும். தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்.

MUST READ