
தொடர் கனமழை காரணமாக, நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையில் குடிநீர் தேவையைப் பூர்த்திச் செய்யும் செம்பரம்பாக்கம், பூண்டி, வீராணம் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏரிக்கான நீர்வரத்து வினாடிக்கு 452 கனஅடியில் இருந்து 514 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3,210 மில்லியன் கனஅடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 105 கனஅடி தண்ணீரும், உபரிநீராக 202 கனஅடியும் திறக்கப்படுகிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 22.35 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி!
இந்த சூழலில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை இன்று (நவ.29) காலை 09.00 மணிக்கு வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் செம்பரம்பாக்கம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு உள்ளிட்டப் பகுதிகளுக்கு வெள்ள அபார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.