தொடர்ந்து கிடுகிடுவென உயரும் தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயருவதால் நகைப்பிரியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் தேவை 135.5 டன்களாக இருந்தது. இந்த அளவு தற்போது 17 சதவீதம் குறைந்து 112.5 டன்களாக உள்ளது. விலை சரிவை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினரும் தங்கத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைத்ததால் தேவையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,605-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.