- Advertisement -

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

‘நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’- 128 பேர் உயிரிழப்பு!
கிண்டி, வடபழனி, கோயம்பேடு, கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் சூழ்ந்த மழை நீரால், வாகனவோட்டிகள் அவதியடைந்தனர்.
சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், அதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. தொடர்ந்து, பெய்து வரும் மழையால், சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதேபோன்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பொழிந்தது.