spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தொழில்துறைக்கும் சலுகை பொருந்தும்"- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

“தொழில்துறைக்கும் சலுகை பொருந்தும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

-

- Advertisement -

 

அமைச்சர் தங்கம் தென்னரசு

we-r-hiring

மின் கட்டணத்தை அபாரதமின்றிச் செலுத்த அறிவித்த கால நீட்டிப்பு தொழில்துறைக்கும் பொருந்தும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

‘தளபதி 68’ பக்கா…. ஓப்பனிங் சாங் வேற லெவல்…. அப்டேட் கொடுத்த படத்தின் பிரபலம்!

இது குறித்து தமிழக மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜாம் புயல் கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பானது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என மத்திய நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்:

இது குறித்து மத்திய நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது, மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை தொடர்ந்து, தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, கடந்த டிசம்பர் 06- ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மின் உபயோகிப்பார்களின் மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிசம்பர் 04- ஆம் தேதி முதல் டிசம்பர் 07- ஆம் தேதி வரை இருந்த மின் நுகர்வோர்களுக்கு அபராத தொகை இல்லாமல் டிசம்பர் 18- ஆம் தேதி அன்று வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்…. தீயாய் பரவும் தகவல் உண்மையா?

இந்த அறிவிப்பானது முதலமைச்சரின் ஆணையின்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மத்திய நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

MUST READ