Homeசெய்திகள்போக்குவரத்து துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் : விரைவில் வேலை நிறுத்தம் போராட்டம்

போக்குவரத்து துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் : விரைவில் வேலை நிறுத்தம் போராட்டம்

-

- Advertisement -

போக்குவரத்து துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் : விரைவில் வேலை நிறுத்தம் போராட்டம்

போக்குவரத்து துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை கையில் எடுப்போம் என்று சி ஐ டி யூ மாநில தலைவர் சவுந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதால் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தொழிலாளர்கள் உரிமை பறிக்கப்படும் போது பார்வையாளராக எப்படி இருக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார்.

கடந்த அதிமுக அரசின் தோல்வியில் இருந்து படிப்பினையை முதல்வர் கற்று கொள்ள வேண்டும். சுய பரிசோதனைக்கு ஒரு முறை உட்படுத்தி கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

போக்குவரத்து துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் : விரைவில் வேலை நிறுத்தம் போராட்டம்

 

சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் தனியார்மயம், ஒப்பந்த முறையை எதிர்த்து சி ஐ டி யூ மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தலைமையில் கருதரங்கம் நடைபெற்றது.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில்,

தனியார் மயம், தாராள மய கொள்கையில் ஒப்பந்த தொழிலாளர்களை நுழைக்கும் முயற்சியில் ஒன்றிய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மற்றும் பொதுத் துறையில் படிப்படியாக தனியார் மயம் வந்து கொண்டுடிருக்கிறது. இனி எந்த பணியும் நிரந்தர பணி இல்லை என்று கூறினார். எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுத்து விடுவோம் என்றால் உழைப்பாளிகள் அதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் எல்லா துறையும் தனியார் மயம் என்றால் அரசும் தனியார் மயம் ஆக்கப்படுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.மன்மோகன் சிங் முதல் மோடி காலம் வரை வளர்ச்சிக்கு இது தான் சரியான பாதை என்று தனியார் மயத்தை ஊக்குவிக்கின்றனர்.

இந்த வளர்ச்சி யாருக்கு லாபம் அல்லது பயன் அளித்துள்ளதா என்று பார்த்தால் இது கார்பரேட் நிறுவனங்களுக்கு லாபமாக உள்ளது.அம்பானி 5000 கோடி செலவில் திருமணம் பண்ணுகிறார். இவர்களின் வளர்ச்சிக்கு அரசு உதவுகிறது என்பதை தான் இது காட்டுகிறது.தனியார் மயத்தை தொடர்ந்து அமல்படுத்தினால் இலங்கை மற்றும் வங்கதேச நிலை தான் ஏற்படும் எனவும் எச்சரித்தார்.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதால் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தொழிலாளர்கள் உரிமை பறிக்கப்படும் போது பார்வையாளராக எப்படி இருக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வினவினார்.
அரசு ஒன்றும் வியாபார நிறுவனம் இல்லை அது லாபம் பார்ப்பதற்கு, அவை சேவை ஆற்ற வேண்டும் என்றார்.

கடந்த அதிமுக அரசின் தோல்வியில் இருந்து படிப்பினையை முதல்வர் கற்று கொள்ள வேண்டும்.சுய பரிசோதனைக்கு ஒரு முறை உட்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.தேர்தலில் இந்தியா கூட்டணி என்பது வேறா தொழிலாளர்கள் உரிமை பறிக்கப்படும் போது அதை எதிர்த்து போராட்டம் நடத்துவதில் எந்த மாறுபட்டு கருத்தும் இல்லை என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.

போலி மருத்துவர்களை தமிழக அரசு ஒடுக்க வேண்டும் : ஐகோர்ட் கிளை உத்தரவு

நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன்,

தனியார் மயம் எங்கிருந்தாலும் அதனை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கொண்டது மதிமுக இயக்கம் என்றார். லாபம் ஈட்டும் துறையாக போக்குவரத்து துறையை பார்க்க கூடாது. அதனை ஒரு சேவையாக அரசு பார்க்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையில் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.12 மணி நேர வேலை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தனியார் மயம் ஆகியவற்றை ஒன்றிணைந்து எதிர்த்து முறியடித்தது போல போக்குவரத்து துறையிலும் தனியார் மயம் என்பதையும் சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சி ஐ டி யு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் பேசியதாவது,

தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்து கழகங்களில் பல அடிப்படை மாற்றங்களை அரசு செய்து கொண்டிருக்கிறது அந்த மாற்றங்கள் செய்யக்கூடாத மாற்றங்கள். தமிழகம் முழுவதும் பரவலாக எல்லா பகுதிகளிலும் பேருந்துகளை இயக்கக்கூடிய ஒரு மாநிலம் இந்த மாநிலம்.

வேறு எங்கும் இவ்வளவு விரிவான போக்குவரத்து கிடையாது. இந்த போக்குவரத்து கழகங்களில் 22,000 பேருந்து ஓடியது, இப்போது 19000 பேருந்துகள் தான் ஓடுகிறது. 3000 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது அண்ணா திமுக ஆட்சியிலேயே அரசாணை போட்டு குறைக்க வேண்டும் என்று போட்டார்கள் அது ஒரு மிகப்பெரிய தவறான விஷயம் அதை இந்த அரசாங்கம் இன்னும் அமல்படுத்துவது தான் வேதனை அளிக்கிறது.

சென்னை நகரத்திலேயே நமக்கு இப்போது  பேருந்துகள் குறைவாக இருக்கிறது. தற்போது அரசாங்கம் விடுவதாக அறிவித்திருக்கும் பேருந்துகளை விட்டாலும் கூட ஏற்கனவே இருந்த பேருந்துகள் இல்லை என்கின்ற நிலை தான் இருக்கிறது. ஆகவே இந்த பேருந்துகளை எல்லாவற்றையும் இயக்க வேண்டும். இரண்டு இருபதாயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த 20,000 பணியிடங்களை நீங்கள் நிரப்பாமல் இந்த போக்குவரத்து கழகங்களை சிறப்பாக இயக்க இயலாது ஆகவே அவற்றை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம்.

அரசாங்கம் தற்காலிக தொழிலாளிகளை வைத்து நிரப்ப முயல்கிறது. நிரந்தர பணி என்றால் அங்கு நிரந்தர தொழிலாளி தான் வேலைக்கு பணி அமர்த்தப்பட வேண்டும். இது காண்ட்ராக்ட் ஒழிப்புச் சட்டம். அந்த சட்டத்துக்கு எதிராக ஒரு அரசு மற்றும் அரசு துறையே செயல்படுவது தான் வருத்தமளிக்கிறது. அதை செய்யாதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம் ஆனால் அரசாங்கம் மீண்டும் மீண்டும் பல கழகங்களில் டெண்டர் விட்டு காண்ட்ராக்ட் முறையில் தொழிலாளிகளை எடுக்க முற்படுகிறது இதை நாங்கள் ஆட்சியோபிக்கிறோம் கண்டிக்கிறோம்.

இப்போது மினி பஸ் என்கின்ற பெயரிலே  5000 பேருந்துகள் கொடுப்போம் என்று சொல்கிறார்கள் இந்த மினிபஸ் என்பது நம்முடைய வழித்தடங்களில் 8 கிலோமீட்டர் ஓடும் அதற்கு பிறகு நம்முடைய பேருந்து இல்லாத இடத்தில் ஓடும் என்று அவர்கள் சொல்கிறார்கள் எட்டு கிலோமீட்டர் ஓடிவிட்டால் நம்முடைய பேருந்துகளின் வருமானம் மிகப்பெரிய அளவுக்கு சரிந்து விடும். ஏற்கனவே வரவுக்கும் செலவுக்கும் வேறுபாடு வித்தியாசம் இருக்கிற இந்த மாநிலத்தில் அது இன்னும் நமது நஷ்டத்தை அதிகப்படுத்தும். இதை ஏன் அரசு ஏற்க மறுக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை.

எவ்வளவு சொன்னாலும் அரசாங்கம் கேட்காமல் இதை அமல்படுத்த துடிக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தபோது இப்போது இருக்கக்கூடிய மினி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது இந்த மினி பஸ்கள் இப்படி நீங்கள் விடுவதால் எந்த புண்ணியமும் இல்லை எங்களுக்கு பர்மிட் கொடுத்து விடுங்கள் என்று கூறுகிறார்கள். மினி பஸ் என்பது நல்லதா? அல்லது அவசியமா? அவசியம் அதை அரசே இயக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அரசு பேட்டரிகள் மூலமாகவே மினி பேருந்துகளை இயக்க முடியும். சென்னையிலேயே பல பேருந்துகளை இயக்கிக் கொண்டிருந்தோம், இயக்கவும் முடியும். அது சுற்றுச்சூழலுக்கு சிறப்பாக இருக்கும் கிராமங்களுக்கு வசதியாக இருக்கும் அந்த அளவிற்கு நம்முடைய பேருந்துகளை மற்ற இடங்களுக்கு நாம் திருப்பி விடலாம் இதை அரசு செய்ய வேண்டும். இதற்கான வரவுக்கு செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு கொடுத்தாள் இந்த பிரச்சனை தீர்ந்து விடும். அதற்கு பணத்தை அரசு ஒதுக்க வேண்டும்.

அரசு இப்போது கிட்டத்தட்ட 15,000 கோடி ரூபாய் போக்குவரத்து தொழிலாளர்கள் பணத்தை எடுத்து செலவு செய்திருக்கிறது. தொழிலாளிக்கு இந்த அரசு கடன் பட்டிருப்பது 15 ஆயிரம் கோடி என்றால் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். அரசு எப்படி எல்லாம் இந்த நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை. ஆகவே தனியார் மையம் என்பது தனியார் மூலமாக ஆளை எடுப்பது தனியாருக்கு பணத்தை கொடுத்து அவர்கள் இங்கே ஆள் அனுப்பி அவர்கள் வேலை செய்வது போவது என்பது அது ஒரு வகையான தனியார் மையம். பேருந்துகளை இவர்கள் வாங்கி அதாவது எலக்ட்ரிக்கல் வாகனங்களை இவர்கள் வாங்கி அந்த பேருந்தை தனியாருக்கு கொடுத்து அவர்கள் அந்த பேருந்தை இங்கு ஓட்டி அதனுடைய வருமானத்தை இங்கு கட்டி விடுவார்கள். அந்த பேருந்துக்கு ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு காசு நான் கொடுத்து விடுகிறேன்.

இவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்ன வருமானம் வருகிறதோ அதை கழகம் எடுத்துக் கொள்ளும் என்பது தான் இப்போது அவர்கள் சொல்லக்கூடிய விஷயம். இதில் மிகப்பெரிய நஷ்டத்தை நாம் சந்திப்போம். ஏற்கனவே மின்வாரியத்தில் செய்ததை போல வரவை விட அதிக செலவை நாம் தனியாருக்கு கொட்டி அழ வேண்டிய நிலை வரும். அரசே அதை இயக்க முடியும் இயக்க வேண்டும்.

இன்னொன்று அவர்களே பேருந்துகளை கொண்டு வந்து அந்த பேருந்துகளில் டிரைவர்கள் அவர்களுடைய ஆட்களாக இருப்பார்கள் கண்டக்டர்கள் நம்முடைய ஆட்களாக இருப்பார்கள் வசூலிப்போம். வசூலித்த பிறகு ஒரு கணக்கை போட்டு கிராஸ் கட் காண்ட்ராக்ட் என்று சொல்கிறார்கள் அதுவும் தனியார் மையம் தான். இது  தனியார் மயப்படுத்துகிற ஏற்பாடாகத்தான் நாங்கள் பார்க்கிறோம் ஆகவே அரசு இதை கைவிட வேண்டும். இது தொடர்பாக இப்படி டெண்டர் விட்டு காண்ட்ராக்ட் முறையில் எடுக்கக் கூடாது என்று நாங்கள் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் ஒரு கடுமையான தீர்ப்பை அரசுக்கு எதிராக கொடுத்தது. இது மிக மோசமான திட்டம் இதை நீங்கள் செயல்படுத்துவது தொழிலாளிக்கு எதிரானது நாட்டுக்கு எதிரானது. இது தொழில் அமைதியை கெடுத்து விடும் தமிழகத்தின் உடைய சமூக நீதிக் கோட்பாட்டை அழித்துவிடும். காண்ட்ராக்டை அனுமதித்தால் இங்கு இட ஒதுக்கீட்டுக்கு இடமில்லை. எனவே இதனை ரத்து செய்தார்கள். மேல்முறையீடு செய்யக்கூடிய அரசாங்கம் இது எங்களுடைய கொள்கை என்று அதில் வாதாடுகிறது. அரசாங்கம் இதுவரை சொல்லிக் கொண்டிருந்த கொள்கை எல்லாம் கைவிட்டதாக தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆகவே இது மிக மிக மோசமான நடைமுறை இது நமது அமைச்சர்களுக்கு மற்றவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் நடக்கிறதா என்றும் எனக்கு புரியவில்லை. ஆகவே இவற்றை உடனடியாக கைவிட வேண்டும். இந்த விஷயங்களை காகத்தான் இங்கு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசாங்கத்தை நாங்கள் பணிவோடு கேட்போம், ஏற்கனவே எந்த முறையில் நாம் செயல்பட்டோம் அந்த முறையில் செயல்படுங்கள். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை கொடுங்கள். பட்ஜெட்டில் செலவில் முன்னுரிமையை போக்குவரத்து மின்சாரம் போன்ற கேந்திர தொழில்களுக்கு கொடுங்கள் கேந்திர செலவுகளுக்கு கொடுங்கள் இதுதான் கட்டமைப்பு தொழில் என்பதை அரசுக்கு நான் வலியுறுத்துகிறேன்.

இல்லாவிட்டால் இதை எதிர்த்து போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்த இருக்கும். வாரிசுக்கு வேலை என்பதை கூட இறந்து போனவர்களின் பிள்ளைகளின் வேலை கூட நீங்கள் முறையாக செயல்படுத்த மறுப்பது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது. 109 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களின் பஞ்சப்படி பாக்கி தொழிலாளிகளுக்கு பாக்கி இருக்கிறது. அதையும் தர மறுக்கிறீர்கள் ஓய்வு பெற்ற பிறகு 22 மாதங்களாக அவர்கள் அவர்களுடைய பணப்பலனை பெறாமல் வெறுங்கையோடு வெளியே நிற்கிறார்கள் அதையும் தர மறுக்கிறீர்கள் இவையெல்லாம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத மிக மோசமான நடவடிக்கைகள். ஆகவே இவைகளையெல்லாம் கைவிட வேண்டும். இந்த பாக்கி தொகைகளை கொடுக்க வேண்டும் என்பதை கூட நான் வலியுறுத்துகிறேன்.

நாங்கள் ஏற்கனவே எங்களுடைய வழியில் கொடுத்து இருக்கக்கூடிய அழுத்தம் காரணமாக தற்காலிக ஏற்பாடு தான் என்று ஒரு அறிவிப்பை செய்திருக்கிறார்கள்.

அந்த அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். மேலும் இந்த பிரச்சனையுடைய ஆழம் தொடர்பாக தமிழகம் முழுவதும் மக்களுக்கு தெரிந்ததாக சொல்ல முடியாது. முதலில் அதை தெரிவிக்க வேண்டும் பஞ்சாயத்து அளவில் எம் எல் ஏக்கள், எம் பி கல் மாநகராட்சி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை நாங்கள் முதலில் சந்திக்க உள்ளோம். எங்களுடைய சங்கம் மூலமாக ஆங்காங்கே மாவட்டங்களில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது அதுதான் நடக்கும் எப்படி கிராமங்களுக்கு பஸ் இல்லாமல் போகிவிடும்? எப்படி பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ரத்தாகிவிடும்? எப்படி இலவச பேருந்து பயணம் மாணவர்களுக்கு ரத்தாகிவிடும்? எவ்வாறு இதனால் பாதிப்பு ஏற்படும்? போன்ற விஷயங்களை எல்லாம் அந்த மக்களுக்கு எடுத்து சொல்லி அந்த விளைவுகளை கொண்டு வரக்கூடியது தான் இந்த தனியார் மைய விளைவுகள் என்று அவர்களுக்கு முதலில் சொல்லப் போகிறோம்.

பின்னர் மக்களுடைய துணையோடு கடுமையான போராட்டத்தை அவசியப்படும்போது நாங்கள் மேற்கொள்வோம். வேலை நிறுத்தத்தின் மூலமாகத்தான் அதை செய்ய முடியும் மக்களின் ஆதரவுடன் தான் அதை செய்ய முடியும் எந்த காரணத்தை கொண்டும் தனியாரை நீங்கள் அனுமதி செய்தால் சமூக நீதி இட ஒதுக்கீடும் கிடையாது பெண்கள் இலவசமும் கிடையாது மாணவர் இலவசமும் கிடையாது எந்த இலவசமும் கிடையாது வருமானமற்ற வழிதடத்தில் பேருந்து இயக்க போவதும் கிடையாது அதனால் கிராமங்களுக்கும் பேருந்துகள் கிடையாது, என்றார்.

MUST READ