spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவரலாற்று சிறப்புமிக்க தலைவர் மறைவு – செல்வப்பெருந்தகை இரங்கல்

வரலாற்று சிறப்புமிக்க தலைவர் மறைவு – செல்வப்பெருந்தகை இரங்கல்

-

- Advertisement -

காங்கிரஸ் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளை நிதானமாகவும், நம்பிக்கையுடனும் வரலாற்று சிறப்புமிக்க தலைவராக விளங்கிய திரு. குமரி ஆனந்தன் அவர்கள் காலமானார் என்பது செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

வரலாற்று சிறப்புமிக்க தலைவா் மறைவு – செல்வப்பெருந்தகை இரங்கல்

we-r-hiring

இது குறித்து அவா் தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக, மிகச் சிறப்பாக பணியாற்றியவர். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என முத்திரை பதித்தவர். 1996இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறந்த முறையில் கட்சியை வழி நடத்தினார்.

திரு.குமரி ஆனந்தன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர். அவருடைய அரசியல் பயணம், சமூக நலனுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள், தமிழ் மக்கள் நலனுக்காக அவர் செலுத்திய பணி, இந்நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்பு நினைவிற்குரியது. அவரது தூய்மை, நேர்மை மற்றும் தலைமைத் தன்மை இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.

‘இலக்கியச் செல்வர்’ என்று புகழப்பட்ட திரு.குமரி அனந்தன் அவர்கள், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கியவர். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 29 நூல்களை எழுதி உள்ளார். திரு.குமரி ஆனந்தன் அவர்களின் மறைவு தமிழ் நாட்டுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.குமரி ஆனந்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளாா்.

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..

MUST READ