spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரி மாணவி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் தீவிர விசாரணை!

கல்லூரி மாணவி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை – போலீஸ் தீவிர விசாரணை!

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லூரி மாணவி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவில் ஆர்.வி.எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். இதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த காளிநித்தியா என்ற 18 வயது மாணவி முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இதனிடையே கடந்த நில நாட்களுக்கு முன்னர் இந்த மாணவி தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார். ஊருக்கு சென்று வந்ததில் இருந்து அந்த மாணவி சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை கல்லூரி விடுதியில் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் கல்லூரி விடுதி கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து விடுதி கண்காணிப்பாளர் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கிய மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சமப்வம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தால் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

MUST READ