Homeசெய்திகள்தமிழ்நாடு"கேட்கும் தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை"- த.வா.க. தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேட்டி!

“கேட்கும் தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை”- த.வா.க. தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேட்டி!

-

 

"கேட்கும் தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை"- த.வா.க. தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேட்டி!

கேட்கும் தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்…… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான நிர்வாகிகள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், “தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவோடு தெரிவித்துள்ளார். த.வா.க. கேட்கும் இடத்தை தி.மு.க. ஒதுக்கும் என நம்பிக்கை உள்ளது. நாங்கள் கேட்டிருக்கும் ஒரு தொகுதியை தி.மு.க. ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ப்ரதர்’….. ரிலீஸ் அப்டேட்!

தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயாராக உள்ளது த.வா.க. தேர்தலுக்கு முன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ