திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும், மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடர்வார் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. உறுதிபட தெரிவித்தார்.


திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி-க்கு சென்னையில் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில், அவருக்கு திமுக மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கனிமொழி எம்.பி., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தேர்தல் அறிக்கை தயாரிக்கும்பொழுது, தேர்தல் அறிக்கை குழு கோவையில் இருக்கும் நிர்வாகிகளிடம் கலந்துபேசி தேதி முடிவு செய்யப்படும். தொழில்துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்டகப்படும்.
திமுக தயாரிக்கும் தேர்தல் அறிக்கை, மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதல்வர் சொல்லியிருக்கிறார். இங்கிருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும்.

மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு தெரிந்துகொண்டு, எதையெல்லாம் செய்ய முடியுமோ?, அதை வாக்குறுதியாக கொடுப்போம். அதில் எண்ணிக்கை என்று எதுவும் கணக்கு இல்லை. பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பல விமர்சனங்களை சில பேர் வைப்பார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இங்கே இருக்கக்கூடிய நபர்களுக்கு தெரியும். இதற்கு மேல் சொல்லத் தேவையில்லை.
யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு மிகத் தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும். ஸ்டாலின் முதல்வராக தொடர்வார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


