spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்பி ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?

நெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்பி ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?

-

- Advertisement -

நெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்பி ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?

திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபை மறைமாவட்ட அலுவலகத்தில் மத போதகர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thumbnail image

திருநெல்வேலியில் இயங்கி வரும் தென்னிந்திய திருச்சபைக்கு 325 தொடக்க பள்ளிகளும்,13 மேல் நிலை பள்ளிகளும்,6 கல்லூரிகளும்,3 ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும்,மேலும் காது கேளாதவர் பள்ளிகளும், கண் தெரியாதவர்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அந்த கல்வி நிறுவனங்களுக்கும் தாளாளர் உள்பட பல பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தி ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் திருநெல்வேலி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திருச்சபையின் கீழ் இயங்கும் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியின் தாளாளராக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

we-r-hiring

ATTACK

இந்த நிலையில் திமுக எம்பி ஞான திரவியத்தை நெல்லை திருமண்டல உயர் கல்வி நிலை குழு செயலாளர் பொறுப்பில் இருந்தும் நெல்லை ஜான்ஸ் பள்ளி தாளாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கி கடந்த வெள்ளிக்கிழமை பேராயர் பர்னபாஸ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து புதிய நிர்வாகியாக அரசு வழக்கறிஞர் அருள்மாணிக்கம் என்பவர் நியமிக்கப்பட்டு பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜான்ஸ் பள்ளி வளாகத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த பிரச்சனை கைகலப்பு வரை சென்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை பேராயர் தரப்பு ஆதரவாளராக இருக்கும் தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊழிய ஸ்தானத்தின் பேராயர் காட் பிரே நோபல் என்பவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் லே செயலாளர் செயலாளர் தரப்பு ஆதரவாளர்கள் அவரை தடுத்து நிறுத்தி சபைக்கு சம்பந்தம் இல்லாதவர் வருவதை அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர். தொடர்ந்து அவர் 1971 இல் இருந்து நான் தூய திருத்துவ பேராலயத்தின் பங்கு உறுப்பினர் என தெரிவித்து அலுவலகத்திற்குள் செல்ல முயற்சித்தார். அதற்கு இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்துக்குள் இருந்து வந்த நபர் ஒருவர் பேராயர் காட் பிரே நோபில் முகத்துக்கு நேரே சென்று அவரது கண்ணத்தில் ஓங்கி அறைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத காட்பிரே நோபில் நிலை தடுமாறினார். தொடர்ந்து அந்த நபர் மற்றும் சிலர் நோபிலை காலால் உதைத்தும் கையால் தாக்கியும் ஓட ஓட விரட்டினர்.

தாக்குதல்

அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு வெளியே அவரை அடித்து தள்ளினர். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் பேராயர் காட் பிரே நோபல் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். மேலும் அவருக்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திருச்சபையில் தொடர்ச்சியாக மோதல் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், எம்பி ஆதரவாளர்கள் பேராயரை சரமாரியாக அடித்து ஓட ஓட விரட்டி அடித்து விரட்டிய சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் லே செயலாளர் ஜெய்சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நிர்வாக ரீதியிலான நியமனங்கள் மற்றும் பிரச்சனைகளில் பேராயர் தலையிடுவதற்கு எந்த விதமான உரிமையும் அதிகாரமும் கிடையாது. நல்ல நிர்வாகத்தை கெடுக்கும் நோக்கில் பேராயர் செயல்பட்டு வருகிறார். கொள்ளையடிக்கும் நபர்களுக்கு புதிய நிர்வாகிகளாக பதவியும் வழங்கி வருகிறார். ஊழியம் செய்வதற்கு மட்டுமே பேராயருக்கு அதிகாரம் உள்ளது. இன்றைய தினம் திருச்சபை அலுவலகத்தில் நடந்த பிரச்சனைக்கும் சபைக்கும் சம்பந்தமே இல்லாத காட்ப்ரே நோபல் தான் காரணம். தென்னிந்திய திருச்சபை அலுவலகத்தில் கழகம் மூட்டுவதற்கு நோக்கம் கொண்டே அவர் செயல்பட்டார் .குண்டர்களை அழைத்து வந்து பிரச்சனை நாடகமாடி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்” என தெரிவித்தார்.

MUST READ