சென்னை சென்ட்ரலில் இருந்து நந்தனம் செல்லவிருந்த கட்டடத் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க.வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது – மு.க.ஸ்டாலின்
இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த தொழிலாளர்கள், கடப்பாரை உள்ளிட்ட கூர்மையான கருவிகளை வைத்திருந்தனர். பாதுகாப்பு விதிகளின் படி, கூர்மையான கருவிகளை மூடிய பிறகு தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ்
மெட்ரோ ரயிலில் பயணிக்க தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கண்டனங்கள் எழுந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.