Homeசெய்திகள்தமிழ்நாடு"அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும்....."- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும்…..”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

-

 

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

முதலமைச்சருக்கு அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டியதுதானே? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடந்த மாதம் 22- ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு 2 கோடியே 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகத்தின் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறாராம்.

அபராதம் மிகவும் அதிகமானது, மீனவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது என்று அந்தக் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். உண்மையில் தமிழக மீனவர்கள் மீது இந்த விடியா திராவிட மாடல் அரசின் முதலமைச்சருக்கு அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி விசை படகுகளையும் மீட்டு தர வேண்டியதுதானே?

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!

ஒன்றிய அரசு என்று கொச்சைப்படுத்திய மத்திய அரசின் காலில் பொம்மை முதலமைச்சர் எதற்காக விழுந்து கெஞ்ச வேண்டும். உக்ரைன், காசா, மணிப்பூர் நிகழ்வுக்கெல்லாம் அதிகாரமே இல்லாமல் பொங்கி நாடகமாடிய ஸ்டாலின், தமிழக மீனவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்தொகையை செலுத்த முன்வராதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அபராதத்தொகையை செலுத்தும்படி அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ