தமிழகத்தில் பூண்டு விலை புதிய உச்சத்தில் இருப்பதால் சாமானிய மக்கள் கவலையடைந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வழக்கமாக, ஒரு கிலோ பூண்டு ரூபாய் 100 முதல் ரூபாய் 125 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக விலை சற்று உயர்ந்துள்ளது.
விளைச்சல் மற்றும் வரத்துக் குறைவுக் காரணமாக, பூண்டின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தை தவிர்த்து வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டின் வரத்து 70% குறைந்துள்ளது. வரும் நாட்களில் பூண்டின் வரத்து குறைவாகவே இருக்கும் என்பதால், அதன் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!
பூண்டின் விலை உயர்வால், நடுத்தர மக்கள், உணவகங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். பூண்டு பொதுவாகவே மருத்துவ குணம் வாய்ந்தது என்பதால், சமையலில் அதிக அளவில் பூண்டு சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.