Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - சவரன் ரூ.55,000ஐ நெருங்குகிறது!

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – சவரன் ரூ.55,000ஐ நெருங்குகிறது!

-

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒருநாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. செவ்வாய் கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. புதன் கிழமை தினம் ஆபரணத் தங்கத்தின் விலைசவரன் ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.6,770-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து ரூ.6,850-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் ரூ.96.50க்கும், ஒரு கிலோ ரூ.96,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ