Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி!

-

- Advertisement -

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி!
File Photo

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை 04.00 மணி முதல் 05.30 மணி வரை நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஜெ.இ.இ., நீட் போன்ற தேர்வுகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பாட வாரியாகப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் ,இந்த தேர்வுகளை எழுத விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காதல் திருமணம் செய்த தம்பதியர் வெட்டிக் கொலை!

பெரும்பாலான மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்கும் வகையில், ஊக்கப்படுத்தலாமே தவிர, கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள், அவற்றைத் தீர்ப்பதற்கான முறைகளை மாணவர்களுக்கு கற்பிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

MUST READ