தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை கண்டித்து, சென்னையில் திமுகவினர் போராட்டம்!
கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மக்கள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில், இன்று (மார்ச் 22) அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது.
பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கோடை மழையை எதிர்நோக்கி மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.