Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!

தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!

-

- Advertisement -

 

தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!
Video Crop Image

தொடர் விடுமுறையால், சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

“சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை”- இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

தொடர் விடுமுறை காரணமாக, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பள்ளி மாணாக்கர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், வார விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்தடுத்து வருவதால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

கார், பேருந்துகளில் அவர்கள் பயணப்படுவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் 5 கி.மீ. தூரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றனர்.

“கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதே போல், பெங்களூருவில் தங்கிப் பணிபுரியும் தமிழர்களும் தங்கள் விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஓசூர் அருகே பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

MUST READ