- Advertisement -
ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி- திமுக கவுன்சிலர் மீது புகார்
ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடியில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் சமீபத்தில் நிறுவனத்தின் முக்கிய தரகராக செயல்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸ். நூற்றுக்கணக்காக முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து கொடுத்துள்ளார் வெங்கடேசன்.
இதே வழக்கில் வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரி 27வது வார்டு கவுன்சிலர் (திமுக) சதீஸ் என்பவரும் தரகராக செயல்பட்டு, பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி வரை வசூலித்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக உள்ளது.