spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட வேண்டும்... திமுகவினருக்கு தலைமை கழகம் அறிவுறுத்தல்

பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட வேண்டும்… திமுகவினருக்கு தலைமை கழகம் அறிவுறுத்தல்

-

- Advertisement -

பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திமுக தலைவர் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பல்வேறு ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா ஒத்திவைப்பு!

மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் திமுக தலைமைக் கழகம் குறிப்பிட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்நிலையில் இருந்தாலும், பொதுமக்கள் தங்களது குறைந்தபட்சத் தேவைகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பதற்றப்படவோ – பயப்படவோ தேவையில்லை. தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியமுமில்லை என்றும் திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மக்கள் இத்தகைய தயார்நிலையில் இருப்பின், அரசாங்கத்தின் முழுமையான கவனத்தை இத்தகைய தயார் நிலைக்குக் கூட வாய்ப்பில்லாத ஏழை – எளிய மக்களின் மீது செலுத்தலாம்; அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்து விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியும் என்றும், மழையை எதிர்கொள்ள அரசாங்கம் முழு அளவில் தயாராக உள்ளது. ஒருவேளை இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப்பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்வோம் என்றும் திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் அரசுடன் திமுகவும் களத்தில் துணையாக நிற்க வேண்டும் என திமுகவினர் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தலைமை கழகம் அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றிய, பகுதி மற்றும் வட்ட செயலாளர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும்,  கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலேயே முழுமையாக இருந்து மக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மழைக்காலத்தில் திமுகவினர், அரசு – பொதுமக்கள் – தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும்,  பொதுமக்களும் – தன்னார்வலர்களும் முன்வைக்கின்ற கோரிக்கைகள், மழை தொடர்பாக தெரிவிக்கின்ற தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அது தொடர்பான மேல் நடவடிக்கைக்கு கட்சி நிர்வாகிகள் வழிவகை செய்யலாம். குறிப்பாக, களத்தில் தன்னார்வலர்களுடன் கை கோத்து, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெற்றுத் தருவதற்கான தலையாயப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் கேட்டுக் கொள்ளப்படுவதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
Photo: DMK

மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.

குடிநீர், பால் ஆகிய இரண்டும் மிக அவசியமான தேவையாக இருக்கும். எனவே தங்கள் பகுதிகளில் அவை தடையின்றிக் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். மீட்புப்பணிகளை மேற்கொள்ள வரும் மாநகராட்சி, மின்வாரிய ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதை உறுதிசெய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

MUST READ