- Advertisement -
21வது வார்டு பகுதியில் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஆய்வு
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊட்டி நகராட்சிக்குட்பட்ட இருபத்தொன்றாவது வார்டு பகுதியில் அமைந்துள்ள இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாதாள சாக்கடை மற்றும் நடைபாதை புதுப்பிக்கும் பணி ரூ.9.95 லட்சம் செலவில் தொடங்கியது.

நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மற்றும் நகர் மன்ற தலைவர் வாணிஸ்வரி மேகநாதன் இதனை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் நகராட்சி கமிஷனர் மற்றும் நகர் மன்ற தலைவரை சந்தித்து அப்பகுதியில் இருக்கும் குறைகளை கூறினார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.