தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!
சென்னை பல்லாவரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன், “நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விவகாரங்களை எப்போதும் வேண்டுமானாலும் பேசலாம். மக்களவைத் தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை. காங்கிரஸ்- தி.மு.க. கச்சத்தீவு குறித்து இவ்வளவு ஆண்டுகளாக பொய் பிரச்சாரத்தை தான் செய்து வந்தன.
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்!
கச்சத்தீவை ஒப்படைக்கும் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கச்சத்தீவு தொடர்பான இரண்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்