spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லக்கடல் நிகழ்வு எச்சரிக்கை - இந்திய கடல்சார் தகவல் மையம்

கல்லக்கடல் நிகழ்வு எச்சரிக்கை – இந்திய கடல்சார் தகவல் மையம்

-

- Advertisement -

இந்திய கடல்சார் தகவல் மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்த நிலையில் குளச்சல், முட்டம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான படகுகள் பாதுகாப்பாக கரையிலேயே நிறுத்தம்.

கல்லக்கடல் நிகழ்வு எச்சரிக்கை - இந்திய கடல்சார் தகவல் மையம்

we-r-hiring

 

கன்னியாகுமரி மாவட்டம் உட்பட கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என்றும் கல்லக்கடல் என்ற நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும் இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடையும் விதிக்கப்பட்டது.

 

கல்லக்கடல் நிகழ்வு எச்சரிக்கை - இந்திய கடல்சார் தகவல் மையம்

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக துறைமுகங்களிலேயே மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

MUST READ