spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகனிமொழி கணவர் மருத்துவமனையில் அனுமதி

கனிமொழி கணவர் மருத்துவமனையில் அனுமதி

-

- Advertisement -

கனிமொழி கணவர் மருத்துவமனையில் அனுமதி

நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னை திரும்பிய நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன் நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னை அழைத்துவரப்பட்டார். பின்னர் கீரிம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரவிந்தனை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து சென்றார்.

MUST READ