கொடைக்கானலில் கோடை விழா தொடக்கம்
கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக நடவு செய்யப்பட்ட மேரி கோல்ட், சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், டேலியா, வில்லியம், ரோஜா உள்ளிட்ட லட்சக்கணக்கான மலர்கள் கொடைக்கானல் பிராண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன.
இந்நிலையில் 61 வது மலர் கண்காட்சி உடன் இந்த ஆண்டின் கோடை விழா தொடங்கியுள்ளது. மலர்களால் உருவாக்கப்பட்ட சேவல், மயில், பொம்மைகள், காய்கறிகளில் டிராகன், கொரில்லா, டெடி பியர் உள்ளிட்ட உருவங்கள் சுற்றுலா பயணிகளுக்காக காட்சி படுத்தப்பட்டுள்ளன.
மலர்க்கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசின் முதன்மை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ் ரிப்பன் வட்டி தொடங்கி வைத்தார்.
கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். இன்று முதல் மே 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் கோடை விழா நடைபெற உள்ளது.