spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'லியோ' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது- ரோகிணி திரையரங்கு முன்பு குவிந்த ரசிகர்கள்!

‘லியோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது- ரோகிணி திரையரங்கு முன்பு குவிந்த ரசிகர்கள்!

-

- Advertisement -

 

'லியோ' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது- ரோகிணி திரையரங்கு முன்பு குவிந்த ரசிகர்கள்!
Video Crop Image

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரைலர், பிரபல சமூக வலைத்தளமான யூடியூப் பக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபல திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

we-r-hiring

“சிறையில் நஞ்சு வைத்து இம்ரான் கான் கொல்லப்படலாம்”- வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!

அனிருத் இசையமைத்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 19- ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், ஏராளமான விஜய் ரசிகர்கள், சென்னை கோயம்பேட்டிற்கு அருகே உள்ள ரோகிணி திரையரங்கு முன்பு குவிந்துள்ளனர். சுமார் 200- க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், திரையரங்கம் முன்பு குவிந்து, லியோ படத்தின் ட்ரைலரை மொபைலில் பார்த்தும், கத்தி, கூச்சலிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

முன்னதாக, ரோகிணி திரையரங்கம் முன்பு பெரிய திரையில் லியோ படத்தின் டிரைலரை வெளியிட திரையரங்க நிர்வாகமும், விஜய் ரசிகர் மன்றத்தினரும் ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ