போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நவீன மயமாக்கலை நோக்கி தவெக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் (Driving License) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) பெறுவதில் இருந்த காலதாமதம் மற்றும் சிரமங்களைக் தவிர்க்கும் வகையில், அனைத்துச் சேவைகளையும் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றும் புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
ஓட்டுநர் தேர்வு முடிந்த அன்றே டிஜிட்டல் லைசென்ஸ் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் வகையில் முதல்வர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:

உடனடி டிஜிட்டல் லைசென்ஸ்: ஓட்டுநர் தகுதித் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெறும் நபர்களுக்கு, தேர்வு முடிந்த அதே நாளிலேயே அவர்களது கைபேசிக்கு டிஜிட்டல் வடிவில் ஓட்டுநர் உரிமம் (Digital License) அனுப்பப்படும்.
டிஜிட்டல் RC முறை: புதிய வாகனம் வாங்குவோருக்கு வாகனப் பதிவுச் சான்றிதழும் (Digital RC) இனி மின்னணு முறையிலேயே உடனடியாக வழங்கப்படும்.
அட்டை வடிவிலான சான்றிதழ்களுக்கு முற்றுப்புள்ளி: ஸ்மார்ட் கார்டுகளுக்காக (Smart Cards) மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை இனி இருக்காது.
வெளிப்படையான சேவை: இடைத்தரகர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பதிவுத்துறை மற்றும் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்படுகின்றன.
அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்புகள்தவெக அரசு அமைந்ததிலிருந்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் புகுத்துவதில் முதல்வர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பொதுமக்கள் வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று பல நாட்கள் காத்துக்கிடப்பதைத் தவிர்த்து, அனைத்துச் சேவைகளும் விரல் நுனியில் கிடைக்கும் இந்த அறிவிப்புக்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அம்பாசமுத்திரம் மக்களுக்குச் சேவையாற்ற மீண்டும் எம்.எல்.ஏ வேண்டும்!” – இசக்கி சுப்பையா அதிரடி பேட்டி
