Homeசெய்திகள்தமிழ்நாடுலாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!

லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!

-

 

லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சைபர் கிரைம் காவலர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

#Rewind 2023: ‘அதானி முதல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரை’- 2023- ல் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த தொகுப்பு!

சென்னை சைதாப்பேட்டை சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் உள்பட ஐந்து பேர் சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, இரும்பு ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காவல் உதவி ஆய்வாளர் உட்பட ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்த மற்றொரு நபர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?

இருவர் படுகாயங்களுடன் விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக, சாலையில் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டிருந்தது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான கார் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

MUST READ