சிவில் வழக்குகளில் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறி எதிர்த்துப் போராட்டம் நடத்த திராவிட விடுதலைக் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேட்டூர் நகர செயலாளர் குமரப்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கில் சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கி இருக்கிறது .
அதன் அடிப்படையில் தமிழ்நாடு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனரும் சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது என்று சுற்றிருக்கை அனுப்பி உள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் மேட்டூர் காவல் நிலைய அதிகாரிகள் சிவில் வழக்குகளில் தலையிடுவது பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்குகளில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்ட விரோத செயல்களை கண்டிக்கும் வகையில் மேட்டூர் சதுரங்க அடி திடலில் திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டதாகவும் ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் எனவே அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி சம்பந்தப்பட்ட இடத்தில் தொடர்ந்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடம் என்றும் இதில் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஜனநாயக ரீதியில் தான் இந்த போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். நிபந்தனைக் உட்பட்டு வருகிற நான்காம் தேதி போராட்டம் நடத்த நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.