Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

மதுரையில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் மேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேற்று மதுரை மாவட்டம் மேலுர் – கீழவளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.இ அவர்கள் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி கட்சிகளில் இருக்கும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்களை ஆதரித்து பரப்புரையாற்றி வாக்கு சேகரித்தார்கள்.

பரப்புரையின் போது, மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு டி.ரவிச்சந்திரன் அவர்கள், மதுரை மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு வி.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியின் மூத்தத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

MUST READ