spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுடியரசு தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

குடியரசு தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

-

- Advertisement -

குடியரசு தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

Tamil News Live Today: டெல்லியில் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்! | latest tamil news live today updates dated on 28-04-2023 - Vikatan

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் 230 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. இதனைத் திறந்து வைத்திட வருமாறு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்க இன்று இரவு டெல்லி செல்ல முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதன் அடிப்படையில் 8.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்தார். இதற்காக இரவு 8 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் முதலமைச்சர் மு. க ஸ்டாலின்.
இந்த நிலையில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமானது, இதனால் முதலமைச்சர் ஓய்வு அறையிலேயே காத்திருந்தார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படாததால் முதலமைச்சர் டெல்லி பயணத்தை ரத்து செய்து இரவு 9.30 மணிக்கு இல்லம் திரும்பினார். மீண்டும் இன்று காலை 6 மணிக்கு விமான மூலம் டெல்லி சென்றடைந்தார். அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார்.

அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று ஜூன் 5ம் தேதி சென்னை வருகிறார் திரவுபதி முர்மு.

MUST READ