Homeசெய்திகள்தமிழ்நாடுபோதைப்பொருட்களை ஒழிக்க சர்வாதிகாரியாக செயல்படுவேன்: மு.க.ஸ்டாலின்

போதைப்பொருட்களை ஒழிக்க சர்வாதிகாரியாக செயல்படுவேன்: மு.க.ஸ்டாலின்

-

போதைப்பொருட்களை ஒழிக்க சர்வாதிகாரியாக செயல்படுவேன்: மு.க.ஸ்டாலின்

தமிழக காவல்துறை சார்பில் “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

MKStalin

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உறுதிமொழி ஏற்றார். போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஏற்றுக்கொண்டனர். விழாவில் தமிழக காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 13,000 கிலோ கஞ்சா தீவைத்து அழிக்கப்பட்டது. செங்கல்பட்டு, சேலம், தஞ்சை, நெல்லை மண்டபங்களில் கைப்பற்றப்பட்ட 13,000 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. கஞ்சா அழிக்கும் நிகழ்வை சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளியில் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “போதைப்பொருட்கள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும். போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. போதைப்பொருட்களை விற்பனை செய்வோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கில் அரசு உறுதியாக உள்ளது. போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருட்களை ஒழிக்க சர்வாதிகாரியாக செயல்படுவேன்” என்றார்.

MUST READ