விளம்பரம் பார்த்தால் வருமானம் எனக்கூறி செயலியும், யூடியூப் சேனலும் நடத்தி வரும் ‘MY V3 ADS’ நிறுவனத்தின் நிறுவனர் சக்தி ஆனந்தன் மற்றும் அதன் ஆதரவாளர்கள் 100- க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ‘MY V3 ADS’ நிறுவனத்தின் நிறுவனர் சக்தி ஆனந்தன் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரமயுகம் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியீடு
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு ‘MY V3 ADS’ என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். யூடியூப் சமூக வலைத்தளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் இரண்டு மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அதில் 360 ரூபாய் முதல் 1.20 லட்சம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராகச் சேர முடியும் என்றும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்… ஆட்டம் போட்ட கூல் சுரேஷ்…
செலுத்தும் பணத்திற்கேற்ப ஆயுர்வேத கேப்ஸ்யூல்கள், புதிய நபர்களைச் சேர்ப்பவர்களுக்கு தனியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்த்ததால் அதிகம் வருமானம் பார்க்கலாம் என்றும் ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி, பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையின் உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் கிரைம் காவல்துறையினர், வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ‘MY V3 ADS’ நிறுவனம் குறித்து அவதூறாகப் பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் தலைமையில் 200- க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
பிரமயுகம் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியீடு
இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்து மனு அளித்த பிறகே கலைந்து செல்வோம் என ‘MY V3 ADS’ நிறுவனத்தின் ஆதரவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களைக் களைந்துச் செல்லுமாறு அறிவுறுத்தியும், களைந்துச் செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்தன் உள்ளிட்ட 200- க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.