Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசின் புதிய தலைமை வழக்கறிஞர் நியமனம்!

அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் நியமனம்!

-

- Advertisement -

 

புதிய அரசு தலைமை வழக்கறிஞர் நியமனம்!

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். அதேபோல், தனது ராஜினாமா முடிவை தமிழ்நாடு அரசிடமும், முதலமைச்சரிடமும் ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“அரசு பேசசுவார்த்தைக்கு அழைக்கவில்லை”- சவுந்தரராஜன் பேட்டி!

கடந்த 2002- ஆம் ஆண்டு முதல் 2008- ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சண்முகசுந்தரம். கடந்த 2021- ஆம் ஆண்டு தி.மு.க. அரசு அமைந்ததும் அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமித்து தமிழக அரசு, அதற்கான கோப்புகளை ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளது.

பி.எஸ்.ராமன் யார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

மூத்த வழக்கறிஞரான பி.எஸ்.ராமன் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட்-ஜெனரல் ஆவார். பி.எஸ்.ராமன் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்து வந்த நிலையில், கடந்த 2004- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

கன்னியாகுமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

கடந்த 2009- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29- ஆம் தேதி தமிழ்நாடு வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி ராஜினாமா செய்தபோது பி.எஸ்.ராமனை அட்வகேட் ஜெனரலாக அப்போதைய முதல்வர் கருணாநிதி நியமித்தார். அதன்பின் தற்போது மீண்டும் தி.மு.க. அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

MUST READ