
“ஒடிஷா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிஷாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வருகிறது. மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சைப் பெற்று வரும் நபர்களது விவரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் காயமுற்று சிகிச்சைப் பெறவில்லை என்ற விவரமும் தெரிய வந்துள்ளது.
“ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவம்”- காவல்துறையினர் தீவிர விசாரணை!
இந்த நிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட விவரத்தின் அடிப்படையில் தொடர்புக் கொள்ள இயலாத நிலையில் உள்ள நாரகணிகோபி (வயது 34), கார்த்திக் (வயது 19), ரகுநாத் (வயது 21), மீனா (வயது 66), எ.ஜெகதீசன் (வயது 47), கமல் (வயது 26), கல்பனா (வயது 19), அருண் (வயது 21) ஆகிய 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், 94458- 69843 என்ற தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம்”. இவ்வாறு தமிழக அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.