spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது

மதுரையில் துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது

-

- Advertisement -
kadalkanni

மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட மெகா கோலப்போட்டியில் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விமல் மற்றும் மண்டல தலைவர் சுவிதாவிமல் ஆகியோர் பார்வையிட்டனர்.                                                               மதுரையில் துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.

மெகா கோலப்போட்டியில் முதல் பரிசாக 1/2 பவுண் தோடும். 2 பரிசாக கால் பவுண் தோடும், 3வது பரிசாக 12 ஆயிரம் மதிப்புள்ள கிரைண்டர். 4வது பரிசாக 10 ஆயிரம் மதிப்புள்ள மிக்ஸியும் போட்டியில் பங்கு பெற்ற ஆயிரம் பேருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படுகிறது.

திருப்பங்குன்றம் கிரிவலப்பாதை படிக்கட்டு முதல் காலை 7 மணி முதலே பெண்கள் குவியத் தொடங்கி தங்களுக்கு வழங்கப்பட்ட பகுதியில் கோலங்களை வரைந்து வண்ணங்களில் அலங்கரித்தனர்.மதுரையில் துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது

கலைஞர் கருணாநிதி துணை முதல்வர் உதயநிதியை வாழ்த்துவது போல்,தமிழர் பெருமை பேசும் எருதுகள் ,  கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என மூவரையும் வண்ணத்தில் வரைந்து பார்ப்பவரை எண்ணத்தில் ஆச்சரியப்பட வைத்த பெண்கள். கலைநயமிக்க கோலங்களை தங்கள் கைவண்ணங்களில் வரைந்து கோலப் போட்டி நடுவர்களையே திகைக்க வைத்தனர்.

கோலப்போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு நாளை மாலை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது மதுரை தெற்கு மாவட்ட செயலர் மணிமாறன் பரிசுகளை வழங்குகிறார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் குரங்கு மரணம்; உயர்நீதி மன்றம் வரை சென்ற பிரச்சினை என்ன?

MUST READ