
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அரசமைப்பு எதிரானது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
“உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?”- முரசொலி!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளாக இன்று (பிப்.14) நடைபெற்று வருகிறது. அப்போது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதேபோல், 2026- ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தனித்தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.
தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசமைப்புக்கு எதிரானது. இந்திய அளவில் கூட ஒரே நாளில் தேர்தலை நடத்திட முடியுமா? உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது என்பது மாநில அரசின் உரிமையில் உள்ளது. தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தொகுதி தொகுதி மறுசீரமைப்பை கைவிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!
இதனிடையே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.